rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
Seeniraj Sivakumar
Categories
Self Development
Notice Board
Storyline
Bodyline
Bull Run
Shivamaha
Tamil Blogs
My Top Posts
The Empty White ...
The Power Factor...
Bull Run-1...
வா&#...
Favourites 1
My writings
What is an RSS feed?
RSS Feed 
seenirajsiva.rediffiland.com/  
Thursday 24 July, 2008
By  Seeniraj Sivakumar   16:02 | 16/Sep/2007 |  34 Comment(s)
  Add Seeniraj Sivakumar as Friend     Write to Seeniraj Sivakumar     Forward this link
கொடுக்கிற தெய்வம்...

வரைபடத்து நதியைப் - போல்
  வெட்டுகின்ற மின்னல்
தெருவிளக்காய் அடிக்கும் - பின்
  தார்பூசும் இருட்டு

பாலித்தீன் பைக்குள் - தலை 
  பத்திரமாய் இருக்கும்
ஓலமிடும் காற்றில் - சருகு
  ஓடி விளையாடும்

வீடு வந்து சேர்ந்தேன் - அவ்
  வினாடி முதல் வானம்
காடுகரை ஊர்கள் - தமைக்
  குளிப்பாட்டு தம்மா
  
மழை பெய்த வேளை - என்
  மனசெங்கும் ஈரம்
அழுக்கான எந்தன் - சிறு
  அரண்மனையா தப்பும்?

மகன் படிக்கும் ஏட்டை - வான்
  மழை வந்து படிக்கும்
புக வசதி செய்து -  கூரை
  பூப்பூவாய்த் தெளிக்கும்

பருப்பு வைத்திருந்த - மண்
  பானைக்குள் இன்று
கருப்பு நிற திரவம் - மனம்
  கண்ணீரில் மூழ்கும்

அகல் வெளிச்சம் நடுங்க - என்
  அரசி முகம் இருளும்
யுக அவதி மறைய - நல்
  இயற்கையென்று அருளும்?

தற்காலிக  நதியாய்- எம்
  தெரு நிறைந்து பாயும்
விற்காமல் கிடக்கும் - முள்
  விறகு படகாகும்

விரும்பியழைக்காமல் - நீர்
  வீட்டுக்குள் நுழையும்
இரண்டடிக்கு மேலே - அட
  உயர்ந்ததம்மா வாழ்க்கை

கட்டில்மேல் குடும்பம் - இடம்
  கிட்டாமல் விழிக்கும்
பெட்டியையும் தூக்கி - இடப்  
  பக்கத்தில் வைத்தோம்
  
அடுப்படியில் பசியை - மழை
  அணைத்து விட்டிருக்க
இடிக்குரலில் வானம் - எனை
  எள்ளி நகையாடும்.


சீனிராஜ் சிவகுமார்
15-செப்டம்பர்-2007

Category: Shivamaha | Permalink