அம்மா இரண்டாம் தாரம்,
ஆல்கஉறால் முதல் தாரம்.
வழக்கமாய் எட்டு மணிக்கு
வருவார் அப்பா.
தள்ளாடுகிறோம்.
அம்மாவின் கன்னத்தை
முத்தமிடும் அவர்
கை.
மனசில் பதிந்தது
ஐவிரல் ரேகை.
அவர் திருவாய் மலர்கையில்
மாசுபட்டது வளிமண்டலம்.
வாசனையால்...
வார்த்தைகளால்…
திறந்து கொள்ளும்
பக்கத்து வீட்டுக்
காதுகள்.
வெங்காயம் நறுக்குவாள் அம்மா
அழுகை வரும் போது.
கரைந்தே இருக்கும்
தங்கையின் நோட்டுப் புத்தகத்தில்
எழுத்துக்கள்.
மஞ்சனெத்தி விறகொடித்து
அடுப்பூதுவாள் அக்கா.
பற்றியெரிகிறது
வாழ்க்கை.
----------------------------------------------------------
சீனிராஜ் சிவகுமார்
8-செப்டம்பர்-2007
உங்கள் அகப் பார்வைக்கு:
இந்த நிகழ்வைச் சொல்லும் மாந்தர் ஆணா பெண்ணா?
அக்கா அழுதாளா இல்லையா?